தமிழில் தோன்றிய கோவை நூல்களும் அதன் ஆசிரியர்களும்
கோவை என்றால் என்ன?
கோவை என்ற சொல்லின் பொருள் யாது? முறையாகக் கோக்கப்பட்டது கோவை என்று பொருள்படும். இந்த இலக்கிய வகையுள் எவை எவை முறையாகக் கோக்கப்பட்டு உள்ளன?
அகப்பொருளுக்கு உரிய துறைகள் பலவற்றை முறையாகக் கோக்கப்பட்ட நூல் ஆகையால் இது கோவை இலக்கியம் எனப்படுகிறது. கோவை இலக்கியப் புலவர்கள் அகத்துறையைச் சார்ந்த பாடல்களை வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாகச் சங்கிலித் தொடர்போலக் கோவையாகப் பாடி உள்ளனர்.
தமிழ் இலக்கியத்தில் கோவை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று
கோவையை பற்றி கூறும் நூல்:
இதன் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள்
ஐந்திணை நெறி வழுவாது அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது கோவை எனும் சிற்றிலக்கியம்என்று கூறுகின்றது
- முதலில் தோன்றிய கோவை இலக்கியம்,
- மாணிக்கவாசகரின் திருக்கோவையார். சிலர் பாண்டிக்கோவை எனவும் கூறுவர்
கோவை நூல்களும் ஆசிரியர்களும்:
- திருக்கோவையார் - மாணிக்கவாசகர்
- திருச்சிற்றம்பலக்கோவை- மாணிக்கவாசகர்
- ஆசாரக் கோவை - பெருவாயின் முள்ளியார்
- நித்திலக்கோவை- (நெடுந்தொகை) அகநானூற்றின் 3ம் பிரிவு
- நாலாயிரக்கோவை - ஒட்டக்கூத்தர்
- தஞ்சை வாணன் கோவை -பொய்யாமொழிப்புலவர்
- ராமீசுவரக்கோவை -கயாதரர்
- அண்ணாமலைக்கோவை -கமலை ஞானபிரகாசனார்
- அசதி கோவை - இடைக்கால ஔவையார்
- காரி கோவை - காரி நாயனார்
- அண்ணா கோவை - கம்பரப்பன்
- அண்ணா கோவை2 -மணியன்
மும்மணிக்கோவை நூல்கள்
- மதுரை மும்மணிக்கோவை - பலபட்டடைச்சொக்கநாத பிள்ளை
- திருவாரூர் மும்மணிக்கோவை- சேரமான் பெருமாள்நாயனார்(11ம் திருமுறை)
- திருக்கழுமல மும்மணிக்கோவை- பட்டணத்துப் பிள்ளையார் (11ம் திருமுறை)
- திருவிடைமருதூர் மும்மணிக்கோவை- பட்டணத்துப் பிள்ளையார்.(11ம் திருமுறை)
- சிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்
- பண்டார மும்மணிக்கோவை - குமரகுருபரர்
- திருவலஞ்சுழி மும்மணிக்கோவை-நக்கீரதேவ நாயனார்
- வலிவல மும்மணிக்கோவை - அருணகிரி நாதர்
Nice
ReplyDelete